Sunday, 4 September 2011

கள்ளி

ள்ளியொன்றின் நிழல்போதுமெனக்கு
ஒரு நாள் முழுக்க ஆடுமேய்த்துவிடுவேன்

கனவுகளில் புதைவேன்
முள்வலி மறப்பேன்
கதைக் கேட்டு நானுமொரு
கதை சொல்வேன்
காதலை எழுதி வைப்பேன்
வாளியொன்றை மாட்டிவிட்டு
சட்டையை சுருட்டி சொருகி வைப்பேன்
ஆட்டின் முலையழுத்தி பசி மறப்பேன்

பாட்டன் சொத்து முசுமுசுங்கை
கிளித் தின்ற கோவைக்கனி
பறித்து கொண்டுசெல்வேன்

அதிலேயே கொடியறுப்பேன்
விறகு சுமக்கும் என் மக்களுக்கு

இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னும்
அதிலிருக்கும் கூடொன்றை
துறக்காமல்
வந்து போய்க்கொண்டுதானிருக்கின்றன
குருவிகள்.

No comments:

Post a Comment